கொரோனா மருத்துவமனைகள் மீது மலர் தூவல்! தளபதி தகவல்!

02 May 2020 அரசியல்
bipinrawat.jpg

வருகின்ற மே-3ம் தேதி அன்று, இந்தியாவில் உள்ள கொரோனாவைரஸ் மருத்துவமனைகள் மீது, மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய போர் விமானங்கள் பறக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், இது நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நாம் செய்கின்ற மரியாதை எனவும் கூறினார்.

நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் என, அனைவருமே கொரோனா வாரியர்ஸ் ஆக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், நாளை மாலையில் இந்தியா விமானப்படை போர்விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பறக்கும் என்றுக் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள கொரோனா வைரஸிற்கு மருத்துவம் செய்கின்ற மருத்துவமனைகள் மீது, இராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்தூவி மரியாதை செய்யும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS