பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை! குற்றவாளியைத் தேடும் போலீஸ்!

27 January 2020 அரசியல்
bjpmembertrichy.jpg

திருச்சியில் பகுதி செயலாளராக இருந்து வந்த பாஜக பிரமுகர் விஜய ரகு என்பவரை, மிட்டாய் பாபு என்பவர் வெட்டிக் கொலை செய்து தப்பித்துள்ளார்.

திருச்சியில் பாலக்கரை என்றப் பகுதியின், பாஜக செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவருக்கும், மிட்டாய் பாபு என்பவருக்கும் இடையே, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. விஜய ரகுவின் வீடானது, திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அப்பகுதியில், இன்று காலையில் கையில் ஆயுதங்களுடன் வந்த மிட்டாய் பாபு, விஜய ரகுவினை சராமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதனால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் விஜய ரகு. வெட்டிய பின்னர், அந்த இடத்தினை விட்டு மிட்டாய் பாபு தப்பிச் சென்றுள்ளார். விஜய ரகுவினை மீட்ட அப்பகுதியினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், கொண்டு செல்லும் வழியிலேயே விஜய ரகு மரணமடைந்துள்ளார்.

இதனால், கொலை செய்த மிட்டாய் பாபு மற்றும் அவருடையக் கூட்டாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்பொழுது வெளியானவர் தான் இந்த மிட்டாய் பாபு என்ற, அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

HOT NEWS