பாலியல் வன்கொடுமை வழக்கு! பாஜக எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு!

16 December 2019 அரசியல்
unnaorape.jpg

உத்திரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏவினை குற்றவாளி என, டெல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி 16-12-2019 அன்று, பிற்பகல் 3 மணி அளவில், வழக்கின் தீர்ப்பினை விசாரித்தார். அப்பொழுது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் சேங்கர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் எனவும், அவர் குற்றவாளியும் எனவும் கூறியுள்ளது. இருப்பினும், அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனைக் குறித்து, இன்னும் எவ்விதத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.

குற்றவாளி என, நிரூபிக்கப்பட்டுவிட்டதால், அவருக்கு குறைந்தது ஒரு ஆயுள் தண்டனையாவது கிடைக்கும் என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

HOT NEWS