சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் இந்தியாவினர்களால், பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான ரூபாயினை, இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அதனை மீட்பதாகக் கூறி, மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இருப்பினும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. தற்காலிகமாக ஒரு நூறு பேரின் பெயரை மட்டும் வெளியிட்டு, அந்தப் பிரச்சனையை மூடி மறைத்தது சுவிஸ் வங்கி.
இந்நிலையில், தற்பொழுது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களைப் பற்றி, இன்று தகவல் வெளியாகி உளது. 2018ம் ஆண்டு அங்கு கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்கள் விரைவில் வெளியாக உள்ளதால், இந்தியாவின் பண முதலைகள் கலக்கத்தில் உள்ளன.