கடந்த இரண்டு நாட்களாக, இந்திய அளவில் பேசப்படும் பொருளாக பாய்ஸ் லாக்கர் ரூம் (#BOYSLOCKERROOM) என்ற ஹேஸ்டேக் உள்ளது. இதற்குக் காரணமாக இருப்பது பாலியல் புகைப்படங்களை பகிர்ந்தவர்களும், அதனை பார்த்தவர்களுமே.
இந்தியாவின் டெல்லியில் உள்ள வசதி படைத்த மாணவர்கள், தங்களுடைய இண்ஸ்டாகிராம் கணக்கின் மூலம், #பாய்ஸ்லாக்கர்ரூம் (#BOYSLOCKERROOM) என்ற குழுவினை நடத்தியிருக்கின்றனர். அதில், தங்களுடன் படிக்கின்ற மாணவிகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேர் செய்தும், பதிவேற்றம் செய்தும் வந்துள்ளனர்.
இது தற்பொழுது, வெளியில் கசிந்துவிட்டது. குறிப்பாக பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், தங்களுடன் படிக்கும் மாணவிகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சேர் செய்துள்ளனர். அத்துடன், சிறுமிகளின் புகைப்படங்களையும் சேர் செய்த விஷயம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்கள் வைத்திருந்த ஸ்கீரின் ஷாட்டானது, டெல்லியில் வசிக்கின்ற பெண் மூலம் லீக்கானது.
இதனைத் தொடர்ந்து, தற்பொழுது இது பேசு பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக, இந்தக் குரூப்பினை நடத்தி வந்த அட்மின் உட்பட 10 பேரினை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், தற்பொழுது வைரலாகி உள்ளது.