பிரேசில் சிறையில் அடிதடி! 40 பேர் பலி!

28 May 2019 அரசியல்
bsnl.jpg

உலகிலேயே அதிக கைதிகளைக் கொண்ட மனாவுஸ் சிறையில், இரண்டு குழுவினருக்கிடையே நடைபெற்றப் பிரச்சனையின் காரணமாக, ஏற்பட்ட மோதலில், 40 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் சுமார் 8,00,000 கைதிகள் உள்ளனர். மிக அதிக கைதிகளை உடையி சிறையாக இந்த மனாவுஸ் பகுதியில் உள்ள சிறை உள்ளது. பிரேசிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த சிறையில், நேற்று முன் தினம் இரு குழுக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரச்சனைப் பெரிதாக மாறிய நிலையில், கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட, முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருட்களை பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட மோதலே, இந்த இறப்புக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த சிறையில், இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் பல முறை, இந்த மாதிரி கலவரங்கள் உருவாகியுள்ளன. அதில், பலரும் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையை, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக அமல்படுத்த உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS