சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், பட்டாக்கத்தியுடன் வந்த நண்பர்களால், தற்பொழுது மணமகன் சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் சிரிப்பலையை உருவாக்கி உள்ளது.
சென்னை பச்சையப்பா கல்லூரியின், முன்னாள் ரூட்டுத் தலையின் திருமண விழா நடைபெற்றது. அதில், முன்னாள் ரூட்டுத் தலையின் நண்பர்கள், தற்போதைய மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
அப்பொழுது, திருமண நிகழ்ச்சியின் பொழுது, மணமகன் மற்றும் மணமகள் கையில் பட்டாக்கத்தியினைத் தந்த நண்பர்கள், அவரை நடனமாடச் சொன்னார்கள். புதுமண தம்பதியும் நடனமாடியுள்ளது. மேலும், கையில் இருந்த கத்தியினை வைத்துக் கேக்கும் வெட்டியுள்ளனர்.
அவ்வளவு தான். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவ, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். கத்தியினை வைத்து கேக் வெட்டியதால், மணமகனைப் போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச சென்றனர். மேலும், மணமகனின் தம்பி மற்றும் அவருடைய நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். விழாவிற்கு கத்தியினை எடுத்து வந்த மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.