இடது பக்கமாக சாயத் தொடங்கிய கட்டிடம்! பொதுமக்கள் பீதி!

08 February 2020 அரசியல்
buildingfall.jpg

பெங்களூரு நகரின் வடக்கில் உள்ள கெம்பூரா பகுதியில், நான்கு மாடிக் கட்டிடம் ஒன்று சாயத் தொடங்கி உள்ளது.

இந்தக் கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக, இடதுபக்கமாக சாயத் தொடங்கி இருப்பதால், அந்த கட்டிடத்தில் வசித்த பொதுமக்களும், அந்தக் கட்டிடத்தினை சுற்றியுள்ள இடத்தில் வசித்த மக்களும், தற்பொழுது தங்களுடைய வீடுகளை விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர்.

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கட்டிடத்தின் உரிமையாளரை அழைத்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், அந்தக் கட்டிடத்திற்கு அருகில், மற்றொருக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், இந்த நிகழ்வு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தில், தரமற்ற மண் இருந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக கட்டிடமானது, ஒரு பக்கமாக சாயத் தொடங்கியுள்ளதாகவும் நம்பப்படுகின்றது. இருப்பினும், இது பற்றியு முழுமையானத் தகவல் வெளியாகவில்லை.

HOT NEWS