தன் வீட்டிற்குச் செல்ல பேருந்து இல்லை! அரசுப் பேருந்தினை எடுத்துச் சென்ற ஓட்டுநர்!

19 February 2020 அரசியல்
singampulicomedy.jpg

இந்தியாவில் தான் இந்த மாதிரியான சம்பவங்களை காண இயலும். அந்த அளவிற்கு, சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது.

தெலுங்கான மாநிலம் விகாராபாத் நகரில், பேருந்து நிலையம் உள்ளது. அந்த நிலையத்தில் வேலை செய்த ஊழியர் ஒருவர், தன்னுடைய வீட்டிற்குச் செல்ல பேருந்திற்காக காத்திருந்தார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு செல்ல எவ்வித பேருந்தும் இல்லை. இதன் காரணமாக, பொறுமை இழந்த மனிதர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு பேருந்தினை எடுத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு, அந்த பேருந்தினை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தினைக் காணாமல், மற்ற ஊழியர்கள் பதறினர். இவர் அந்த பேருந்தினை எடுத்துச் சென்றுள்ளார் என்பதை அறிந்ததும், அவர் வீட்டிற்குச் சென்று பேருந்தினை மீட்டனர்.

இது குறித்து, பேருந்து நிலைய அதிகாரிகள் அளித்தப் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த செய்தியானது, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஊருள இருக்குற அம்புட்டு அறிவாளியும், நம்ம ஊர்ல தான்யா இருக்கானுங்க! சின்னாலப் பட்டி, திண்டுக்கல்லு, சின்னாலப் பட்டி, திண்டுக்கல்லு.

HOT NEWS