டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாப்ராபாத் நகரின் அருகே, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிஏஏவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டம் நடந்தது. இதில், பலரும் கலந்து கொண்டனர்.
அமைதியாகவேப் போராட்டம் நடைபெற்று வந்தது. அப்பொழுது, பாஜகவின் கபில் மிஷ்ரா என்பவர், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நகர்வலம் நடத்த முடிவு செய்திருந்தார். அதற்காக, ஜாப்ராபாத் மற்றும் டெல்லியின் பிற பகுதிகளில் பாதுகாப்பு அளிக்கக் கோரினார்.
இதனிடையே, போலீசார் இந்தப் போராட்டங்களை கலைத்து விட்டதாகவும், நீங்கள் நடைபயணம் செல்லலாம் எனவும் கூறினர். ஆனால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருந்ததால், ஆத்திரம் அடைந்த பாஜகவின் சிஏஏ ஆதரவாளர்கள், போலீசுடம் மோதல் போக்கினைக் கடைபிடிக்கத் தொடங்கினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.