கர்நாடகாவில் கோர விபத்து! 13 பேர் பலி! 10 தமிழகர்கள் மரணம்!

07 March 2020 அரசியல்
caraccident.jpg

கர்நாடகாவில் நடைபெற்ற கோர விபத்தில், பத்து தமிழர்கள் உட்பட, மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகாவிற்கு, தன்னுடைய குழந்தை சைத்தன்யா ஈஸ்வரின் முடிக் காணிக்கை செலுத்துவதற்காக, ஓசூருக்கு அருகில் உள்ள சிக்கனப்பள்ளியினைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் தன்னுடைய குடும்பம் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் கிளம்பி கர்நாடகாவில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

கோயிலில் பூஜைகள் முடித்த பின்னர், மீண்டும் தஙளுடைய சிக்கனப்பள்ளிக்குத் திரும்புகையில், இரவு 2.30 மணியளவில், கர்நாடகாவின் குனிகல் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இவர்கள் சென்ற காரானது, கட்டுப்பாட்டினை இழந்து எதிரே இருந்தப் பாதைக்குள் நுழைந்தது. அப்பொழுது, எதிரில் வந்த காருடன் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில், மஞ்சுநாத் உட்பட 10 தமிழகர்கள் விபத்தில் பலியாகினர். மேலும், லக்ஷ்மி காந்த், சந்தீப் மற்றும் மது என்ற மூவரும் இந்த விபத்தில் பலியாகினர். இந்த விபத்துக் குறித்து கவலைத் தெரிவித்த முதலமைச்சர், இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக சுமார் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்தில், மூன்று பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

HOT NEWS