உத்திரப் பிரதேச மாநிலத்தில் காரும் லாரியும், ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒன்பது பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் நகருக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது உத்திரப் பிரதேச மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நவாப்காஜ் பகுதியில், இந்த காரும், எதிரில் வந்த லாரியும் மோதியது.
இதனால், காரில் சென்றவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.