தஞ்சை ஆவுடையார் கோயிலில் குடமுழுக்கு நடத்தத் தடை கோரி வழக்கு!

27 January 2020 அரசியல்
periyakoyil.jpg

தஞ்சை ஆவுடையார் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கிற்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கறிஞர் சரவணன் என்பவர் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

தஞ்சை ஆவுடையார் கோயிலில், தற்பொழுது காப்பு கட்டும் நிகழ்ச்சியானது கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், குடமுழுக்கானது தமிழில் உள்ள மந்திரங்களைப் பயன்படுத்தி நடத்த வேண்டும் என, கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதனிடையே, ஆகம விதிப்படியே தஞ்சை ஆவுடையார் கோயிலில் திருக்குடமுழுக்கானது நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே, தொல்லியல் துறையிடம் முறையான அனுமதிப் பெறாமல், நடத்தப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வலியுறுத்தியும் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் வழக்குத் தொடர்ந்து உள்ளார். இதனை, நீதிமன்றம் விசாரிக்கவும் உள்ளது.

HOT NEWS