சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில், வழிபாட்டிற்காக வந்திருந்த பெண் மீது அக்கோவில் தீட்சிதர் தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. அங்கு ராஜராஜ சோழன் முதல், பலரும் வந்து வழிபாடு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த கோவிலுக்கு வந்த செவிலியர் லதா என்பவர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அவரை, அக்கோவிலின் தீட்சிதர் தர்ஷன் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த லதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். லதாவின் புகாரினை ஏற்று, தீட்சிதர் தர்ஷன் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.