மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியா, பாஜகவில் இணைந்தார். இதனால், அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியானது கவிழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் சிந்தியாவினைப் பழிவாங்கும் பொருட்டு, அவர் மீதான வழக்குகள் அனைத்தும் தூசித் தட்டப்பட்டு மீண்டும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு, சிந்தியா மீது நில அபகரிப்பு மற்றும் முறைகேட்டு புகார் எழுந்தது.
ஸ்ரீவத்ஸவா என்பவருக்கு, ஆறாயிரம் சதுர அடி நிலத்தினை விற்பதாகக் கூறி பணம் பெற்ற சிந்தியா குடும்பத்தினர், சில சதுர அடி நிலத்தினையே விற்றுள்ளனர். இதனால், வெறுப்படைந்த ஸ்ரீவத்ஸவா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது, கடந்த 2018ம் ஆண்டு தான் முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ஸ்ரீவத்ஸவாவிடம் புதிதாக புகார் மனுப் பெறப்பட்டு உள்ளது. அதனை வைத்து, சிந்தியா மீது மத்தியப் பிரதேச மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.