சாத்தான்குளம் மர்ம மரணம்! கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரணை!

14 July 2020 அரசியல்
cbi.jpg

சாத்தான்குளத்தில் தந்தை மகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கினை, கொலை வழக்காக மாற்றி சிபிஐ அமைப்பானது விசாரிக்க ஆரம்பித்து உள்ளது.

கடந்த மாதம் 19ம் தேதி அன்று, சாத்தான்குளத்தில் செல்போன் வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர், போலீசார் தாக்கியதில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இதனிடையே, அவர்கள் மரணம் குறித்து தாமாக முன்வந்து விசாரித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. இந்த வழக்கானது, பின்னர் சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது.

அவர்கள், செய்த விசாரணையில் இந்த மரணத்தில் தொடர்புடையதாக, மொத்தம் ஐந்துக் காவலர்களைக் கைது செய்தனர். இந்த விவகாரம், இந்திய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்படுவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த வழக்கானது, தற்பொழுது சிபிஐ பிரிவினர் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வழக்கில் தற்பொழுது தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கானது, கொலை வழக்காக மாற்றி சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சப்இன்ஸ்பெக்டர் ரகுகணேஷை முதன்மைக் குற்றவாளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

HOT NEWS