சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள், தற்பொழுது அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், அவ்வகுப்புகளில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கான தேர்வு தேதியினைத் தற்பொழுது, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை ஒன்று முதல் 15ம் தேதி வரை, நடைபெறும் எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராகவும் கூறியுள்ளது. இருப்பினும், இது குறித்த விரிவாண தேர்வு அட்டவணையானது, விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.