கொரோனா வைரஸ் பாதிப்பானது, இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. இதனால், மருத்துவ வசதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வருகின்ற 24ம் தேதி மாலை ஆறு மணிக்குத் தொடங்கி, மார்ச் 31ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தற்பொழுது மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு, என்ன மருந்துப் பயன்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்ஸி குளோராகுயின் எனும் மருந்து தான், தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மருந்தானது, மலேரியா நோய், ஆர்த்திரிட்டிஸ் போன்ற நோய்களுக்குப் பயன்படும் மருந்தாகும்.