இந்தியாவின் 82 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவினை மத்திய அரசு விதித்துள்ளது. நேற்று இந்தியா முழுவதும், ஜனதா கர்ப்பூ எனப்படும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை, இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை இந்திய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது. அவைகளுக்கு, வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை, 144 தடை உத்தரவு விதித்துள்ளது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும், இந்த தடையினை மத்திய அரசு விதித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் இந்த லிஸ்ட்டில் உள்ள மாவட்டங்களில், வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், மருந்துகள் வாங்கவுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.