ஒரே தேசம், ஒரே மார்க்கெட் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்பொழுது அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவைரஸ் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், நேற்று மூன்று முக்கிய அறிவிப்புகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்தார்.
விவசாயிகளின் பொருட்களை விற்பனை செய்வதற்கு, அதன் சந்தையை எளிமைப்படுத்தி உள்ளோம். இனி ஒரே தேசம் ஒரே மார்க்கெட் என்ற திட்டத்தின் கீழ், அனைவரும் தங்களுடையப் பொருட்களை எளிதாக விற்கலாம்.
கொல்கத்தா துறைமுகத்தின் அறக்கட்டளையின் பெயரினை, சியாமா பிரசாத் முகர்ஜி என மாற்றிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் தொழில் வளர்ச்சியினை எளிதாக உயர்த்த இயலும். அதற்கான முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.