சென்னையில் கனமழை! விடுமுறை கிடையாது!

21 November 2019 அரசியல்
rainhome.jpg

சென்னையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இருப்பினும், சென்னையில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வடகிழக்குப் பருவ மழையின் காலமாகும். இக்காலக்கட்டத்தில் தமிழகத்தின், பல பகுதிகளில் நல்ல மழைப் பெய்து வருகின்றது. இருப்பினும், கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு பெய்து வரும் மழையின் அளவு குறைவு. இருப்பினும், காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் புல்புல் புயல், கியார் புயலின் காரணமாக மழை பெய்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழைப் பெய்து வருகின்றது. இன்று காலையில் தான், மழையின் அளவு சற்றுக் குறைந்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HOT NEWS