சென்னை மாணவர்கள் போராட்டம்! விடுமுறை அறிவிப்பு!

18 December 2019 அரசியல்
madrasuniversity.jpg

சென்னையில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், டிசம்பர் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, போலீசார் தடியடி உள்ளிட்டத் தாக்குதல்கள் நடத்தினர். இதனைக் கண்டித்து, கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவின் பல்வேறுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்கலைக்கழகம் வரும் 23ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கலைந்து செல்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர்கள் தொடர்ந்து இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை, கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம் என்றனர்.

HOT NEWS