கணவனின் மகளைக் கொன்ற இரண்டாவது மனைவி கைது!

09 October 2019 அரசியல்
child1.jpg

கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தையை, மாடியில் இருந்து வீசிக் கொலை செய்த சித்தி, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேலையூரில் உள்ள, அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ள சக்ரபாணித் தெருவின், அடுக்குமாடிக் குடியிருப்பில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகின்றார். அவருக்கு வயது 31. அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு, ராகவி என்ற மூன்று வயதுப் பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், இரண்டாம் திருமணம் செய்வதற்காக விளம்பரமும் செய்திருந்தார் பார்த்திபன். அப்பொழுது, சூர்யகலா என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். சூர்ய கலாவிற்கு, முதல் கணவர் மூலம் ஒரு பையன் இருக்கின்றான். இதனால், இனிக் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என இருவரும் வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே, சூர்யகலா கர்ப்பம் தரித்துள்ளார். அதனைக் கலைக்கும்படி, பார்த்திபன் கூறியுள்ளார். ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் இருப்பதால் தான் இவர் கூறுகிறார் என எண்ணி, அருடைய ஆறு வயது ராகவி என்றப் பெண் குழந்தையை மாடியில் இருந்து வீசியுள்ளார். பின்னர், தன் கணவருக்கு போன் செய்து, குழந்தையைக் காணவில்லை எனக் கூறியுள்ளார். பார்த்திபனும், அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். பின், வீட்டிற்கு பின் புறத்தில் இருந்த புதரில் குழந்தை கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

உடனே, குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், அக்குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

மாடியின் உயரத்தை விட, குழந்தையின் உயரம் குறைவு என்பதால், போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதனால், அருகில் வசித்தவர்களிடம் விசாரிக்கையில், சூர்யகலா குழந்தையை கொடுமைப்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், சூர்யகலா அழுது கொண்டே இருந்ததால், அவரிடம் முதலில் மென்மையாக விசாரித்தனர். சூர்யகலா சரியாக பதில் தராததால், போலீஸார் சற்று அவர்களுடையப் பாணியில் விசாரிக்க, இரண்டு குழந்தைப் பிறக்கத் தடையாக இருந்ததால், அந்தப் பெண் குழந்தையை மாடியில் இருந்து வீசிக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார் சூர்யகலா.

இதனால், போலீசார் வழக்குப் பதிவு, சூர்யகலாவினை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS

S