சிறார் ஆபாச படம் பார்த்த சிறுவன் கைது! நீண்ட தேடுதலுக்குப் பிறகு சிக்கினான்!

30 January 2020 அரசியல்
raviips.jpg

சிறார் ஆபாசப் படங்களை டவுன்லோட் செய்து வைத்திருந்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியில், தனியார் டியூசன் சென்டர் உள்ளது. அதனை நடத்தும் நபரின் மகன் ஹரீஷ். இவரை சென்னைக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தன்னுடைய 11ம் வகுப்புப் படிக்கும் பொழுதில் இருந்தே, குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்து வந்துள்ளார். கடந்த எட்டு வருடங்களாக இவருடைய ஐபி அட்ரஸ்ஸில் இருந்து எந்த மாதிரியான வலைதளங்களுக்குச் சென்றுள்ளார் என, போலீசார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதனையடுத்து, அவருடைய வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர்.

அங்கு, அவருடைய மொபைல் போன் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில், சுமார் 500க்கும் மேற்பட்ட சிறார்களின் ஆபாசப் படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறார்களின் ஆபாசப் படங்களை பார்ப்பதும், டவுன்லோட் செய்வதும், அப்லோட் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். அவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்பொழுது வரை, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS