சீனாவில் கொடூரம்! கோவிட்-19 நோயாளிகள் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து விபத்து!

12 March 2020 அரசியல்
buildingcollapse.jpg

சீனாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த ஓட்டலானது, சீட்டுக் கட்டுப் போல சரிந்து விழுந்துள்ளது.

சீனாவின் குவான்ஷூ என்ற நகரில், பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அதில், 71 பேர் தங்கியிருந்தனர். இதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த, நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், ஓட்டலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்தக் கட்டிடமானது திடீரென்று, சீட்டுக் கட்டுப் போல சரிந்து விழுந்துள்ளது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த விபத்தில், அந்தக் கட்டிடத்தில் இருந்த 10 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், 72 மணி நேரம் போராடி, அந்தக் கட்டிடத்தில் சிக்கியிருந்த இளைஞரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

இது குறித்து, விளக்கம் அளிக்கும்படி, அந்த ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது காவல்துறை. இந்த சம்பவம், தற்பொழுது அந்த நகரில் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS