அரசு நான் இறப்பதை எதிர்ப்பார்கிறதா என, கற்பழிப்பு புகார் கூறிய சட்டக் கல்லூரி மாணவி கூறியுள்ளார்.
சாமியார் சின்மயாநந்தா மீது, கற்பழிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு புகார் மற்றும் வீடியோ வெளியிட்ட அந்த மாணவி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர், அவருடைய சார்பில், சுமார் 43 வீடியோக்கள் போலீசாரிடம் சமர்பிக்கப்பட்டது.
இதனிடையே, உச்சநீதிமன்றம், சிறப்புப் புலனாய்வு குழு ஒன்றினை அமைத்து, இது தொடர்பாக பல இடங்களில் விசாரணை நடத்தியது. அந்த சட்டக் கல்லூரி, ஆசிரமம், ஹாஸ்ட்டல், சின்மயாநந்தா அறை உட்பட பல இடங்களில், சோதனையும் நடத்தியது. தொடர்ந்து சின்மயாநந்தா அறைக்கு, சீல் வைக்கவும் செய்தது.
சின்மயாநந்தாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன், உடல்நலம் சரியில்லாமல் போனது. தொடர்ந்து, அவருடைய வீட்டிலேயே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பதில் அளித்துள்ள அவருடைய தரப்பு, அவருடைய உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவருடைய இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை எனவும், கூறியுள்ளனர்.
நீதிபதி முன்னிலையில், ஆஜரான அந்தப் பெண் தற்பொழுது, தீக்குளிப்பேன் என பகிரங்கமாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், நீதிபதி முன்னிலையில், நான் ஆஜரானப் பின்பும் அவரை காவலர்கள் கைது செய்யவில்லை. நான் இறப்பதை அரசு எதிர்ப்பார்க்கிறதா? அவரைக் கைது செய்யவில்லை என்றால், நான் தீக்குளித்துக் கொள்வேன் எனப் பகிரங்கமாக கூறிவிட்டார்.