உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, பாஜகவின் முன்னாள் மந்திரி சுவாமி சின்னமயானந்தாவிற்கு எதிராக, அவருடைய சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலியல் புகார் அளித்தார்.
இதனை முன்னிட்டு, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணிடம் பத்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய சிறப்பு பிரிவினர், அந்த கல்லூரியை நடத்தும், சின்னமயாவிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். பின் அவருடைய படுக்கை அறைக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அவர்கள் சார்பில் சுமார் 43 வீடியோக்களை சிறப்பு புலணாய்வு விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளார். தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததால், என்ன செய்வதென்று தெரியாமல், அந்தப் பெண் சின்னமயானந்தாவிடம் செல்லும் பொழுது, இரகசியமாக கேமிரா ஒன்றை வைத்து நடந்தவைகளைப் பதிவு செய்துள்ளார்.
இவர் கல்லூரியில் படிக்கும்ப பொழுது, இவர் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், பின்னர், வேறு வழியில்லாமல் சின்னமயானந்தாவிடம் மாட்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். அந்தப் பெண் படிக்கும் பொழுது, பலவித சலுகைகள் கல்லூரியின் நிர்வாகம் செய்தும் கொடுத்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.