பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சின்னமயானந்தாவிடம், போலீசார் துருவித் துருவி விசாரணை செய்து வருகின்றனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில், ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை வைத்துள்ள, சின்னமயானந்தா, பல கல்வி நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் மீது அருடையக் கல்லூரியில் படித்தப் பெண் பாலியல் புகார் கூறினார். அவர் தன்னை ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு செய்கிறார் என்றும், பாலியல் பலாத்காரமும் செய்தார் என்றும் கூறினார். இதனை முன்னிட்டு, வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்பொழுது, அவருடைய ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அவருடைய சொகுசு அறைக்கு சீல் வைத்தனர். பின், அந்தப் பெண்ணின் முன்னிலையில், சின்னமயானந்தாவிடம் பல மணி நேரங்களாக போலீசார் விசாரணை நடத்தினர். நம் இந்தியாவில் மட்டும் தான்யா, இந்த சாமியார்கள் தொல்லைத் தாங்க முடியல!