76 ஆண்டுகளாக உணவு நீர் குடிக்காமல் வாழ்ந்தவர் மரணம்!

26 May 2020 அரசியல்
chundadivalamataji.jpg

இந்தியாவில் பல விநோதமான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்தவர்களில், 76 ஆண்டுகளாக உணவு மற்றும் குடிநீர் அருந்தாமல் வாழ்ந்து வந்த பிரகலாத் ஜானி என்பவர் மரணமடைந்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் வாந்து வந்தவர் பிரகலாத் ஜானி என்ற சுன்ரிவாலா மாதாஜி என்பவர். அனைவரும் இவரை, வாசி யோகி என்றே அழைத்து வந்தனர். தன்னுடைய இளமை வயதில், வீட்டினை விட்டு ஆன்மீகப் பயணத்திற்காக வெளியில் வந்தார் சுன்ரிவாலா.

வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு குகையில் அமைதியாக அமர்ந்து, தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 76 ஆண்டுகளாக உணவு, குடிநீர் என எதையும் எடுத்துக் கொள்ளாமல், காற்றினை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்தார் சுன்ரிவாலா. இவருக்கு என, பிரத்யேக பக்தர்கள் கூட்டமே உள்ளது.

இவரை 2010ம் ஆண்டு 15 நாட்கள் கண்காணித்த விஞ்ஞானிகள், இவர் யாராலும் கணிக்க இயலாத அதிகப்படியான உணவு மற்றும் நீர் தாக்குப்ப்பிடிக்கும் உடலாக அவருக்கு உள்ளது என்றுக் கூறினர். அவர் உணவும், குடிநீரும் எடுத்துக் கொள்ளவில்லை என ஒப்புக் கொண்டனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது.

இவரை பெண் தெய்வமாக, பொதுமக்கள் வழிபட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, சுன்ரிவாலா மாதாஜி இறையடி சேர்ந்தார். இதனை அவருடைய பக்தர்கள், தற்பொழுது வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS