மின்சார ஆட்டோக்களை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

29 November 2019 அரசியல்
electricauto.jpg

அரைமணி நேரம் சார்ஜ் செய்தார் நூறு கிலோ மீட்டர் ஓடும், மின்சார ஆட்டோ சேவையினை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைத்தார். எரிபொருள் சிக்கனம், காற்று மாசு குறைத்தல் உட்பட பலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, இந்த மின்சார ஆட்டோக்கள் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்று காலையில், பச்சை கொடி காட்டி இந்த ஆட்டோக்களை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. இந்த ஆட்டோக்களை அரை மணி நேரம் சார்ஜ் செய்தாலே, சுமார் 100 கிலோ மீட்டர் வரை செல்லும் திறனுடையது. மேலும், இந்த ஆட்டோக்கள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பயனிக்கும் சக்தி உடையது.

இந்த ஆட்டோக்களை விரைவில் தமிழகம் முழுவதும் பயன்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதன் சார்ஜ் செய்யும் கட்டணமும், சார்ஜ் செய்யும் இடங்களும் சரியாக கட்டுப்படியாகும் விதத்தில் அமைந்துவிட்டால் போதும். இதனை தமிழகம் முழுவதும் நாம் காண இயலும் என, வாகன ஓட்டிகள் கருதுகின்றனர்.

HOT NEWS