குஜராத்தில், ஒரே ஏடிஎம்மினைப் பயன்படுத்திய மூன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரானது அமலில் உள்ளது. தற்பொழுது குஜராத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, இந்த கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. அங்குள்ள பாட்னாவில் உள்ள இராணுவப் பிரிவில், மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்த சக வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அந்த மூன்று பேர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு எப்படி, கொரோனா வைரஸ் பரவியது என விசாரணையை மேற்கொண்டனர். அதில், ஒரே நாளில், இந்த மூன்று பேரும், ஒரு ஏடிஎம் இயந்திரத்தினைப் பயன்படுத்தி, பணம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அந்த ஏடிஎம்மினை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை சுத்தம் செய்யும் பணிகளை தொடர்ந்தனர். மேலும், அந்த ஏடிஎம்மினைப் பயன்படுத்தியவர்கள் யார் யார் என, விசாரித்து அவர்களிடம் சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது தற்பொழுது, குஜராத்தில் கடும் பீதியினை ஏற்படுத்தி உள்ளது.