கொரோனா வைரஸ் கடவுளின் செயல்! ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது!

29 August 2020 அரசியல்
nirmalacorona.jpg

கொரோனா வைரஸ் கடவுளின் செயல் எனவும், இதன் காரணமாக ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது எனவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் தற்பொழுது அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், இதனால் ஜிஎஸ்டி வரி வசூலானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார். மத்திய அரசு 1.65 லட்சம் கோடியினை, மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள இந்த நிலையானது, கடவுளின் செயல் எனவும், மாநிலங்களுக்கு வழங்குவதற்கான நிதியினை, ரிசர்வ் வங்கியிடம் வாங்க பேசி வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS