மனிதனிடம் இருந்து, மிருகங்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது எனக் கூறிவந்த நிலையில், தற்பொழுது மனிதர்களிடம் இருந்து மிருகங்களுக்கும் இந்த வைரஸ் பரவி வருவது உறுதியாகி உள்ளது.
தற்பொழுது அமெரிக்காவின் உயிரியல் பூங்காவில் இந்த வைரஸ் தொற்று பரவி வருகின்றது. அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் புலி ஒன்றிற்கு, இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தப் புலியினைப் பராமரித்த நபருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவரிடம் இருந்து, இந்தப் புலிக்குப் பரவி இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இதனால், அந்த பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.