கடந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட மாட்டின் கோமியத்தினைக் குடித்தால் போதும் என, இந்து முன்னணி தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட மாட்டின் கோமியத்தினைக் குடித்தால் போதும் என, பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும், மிக வேகமாக சீனாவில் உருவான கொரோனா வைரஸானது, பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சர்வதேச சுகாதார அமைப்பு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இருப்பினும், தற்பொழுது வரை இந்த நோய்க்கு எவ்வித தடுப்பு மருந்தோ அல்லது குணப்படுத்தும் மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், தற்பொழுது வரை 3,000 பேர் மரணமடைந்துள்ளனர். 80,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் தற்பொழுது வரை மூன்று பேர், இந்த கோவிட்-19 வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அசாம் மாநிலம் ஹஜோ தொகுதி பாஜக எம்எல்ஏவான ஹரிப்ரியா, சட்டசபையில் பேசினார். அவர் பேசுகையில், மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தின் மூலம், கொரோனா வைரஸைக் குணப்படுத்த இயலும் எனக் கூறினார்.
அவர் பேசுகையில், நம் நாட்டில், மாட்டின் சாணத்தினை வீட்டின் வாசலில் தெளிப்போம். இதன் காரணமாக, காற்று சுத்தமடைகின்றது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு, காற்றில் உள்ள நச்சுக்கள் அழிகின்றன. அதனை அசாம் முழுவதும் நாம் செய்ய, அரசு முயற்சிக்க வேண்டும். மேலும், நம்முடைய ரிஷிக்கள், முனிவர்கள் எனப் பலரும் இதனைப் பின்பற்றி வந்துள்ளனர்.
அவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்த மாட்டின் கோமியத்தினையும், பசுவின் சாணத்தினையும் பயன்படுத்தி, தற்பொழுது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைத் தடுக்க இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.