கலைஞரின் தளபதி வெற்றித் தளபதி! சிபி ராதாகிருஷ்ணன் பேச்சு!

06 September 2019 அரசியல்
mkstalincpr.jpg

திருப்பூரில் தற்பொழுது ஒரு அதிசயம் நடைபெற்றுள்ளது. அங்கு நடைபெற்ற திருமண விழா ஒன்றில், திமுக தலைவர் திரு. முக.ஸ்டாலினை, பாஜகவின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

திருப்பூரில், திமுகவின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழாவில் பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதில், திமுக தலைவர் திரு. முக ஸ்டாலின், திருமதி துர்கா ஸ்டாலின், திரு. டிஆர் பாலு, திரு. பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பாஜகவின் மூத்தத் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். அதில், பாஜகவின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. சிபி ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

அப்பொழுது, மேடையில் பேசிய அவர், கலைஞருக்குப் பிறகு யார் எனத் தெரியாத நிலையில், முக ஸ்டாலின் தளபதியாக மட்டுமில்லாமல், எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் இருக்கின்றார். அதே போல் நாங்கள் இன்னும் திரு. மு.கலைஞரைப் போல், அதிகம் உழைக்க வேண்டும் எனக் கற்றுக் கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளார். இது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில், அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

HOT NEWS