மாட்டிற்கு வெடி! வாய் கிழிந்தது! மற்றொரு கொடூரம்!

12 June 2020 அரசியல்
cowcracker.jpg

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பில்ஷாபூர் மாவட்டத்தில், பசு மாட்டிற்கு அதன் தீவணத்தில் பட்டாசினை வைத்து கொடுத்து, மாட்டின் வாய் கிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம், கேரளாவில் யானைக்கு தேங்காயில் வெடிமருந்து கலந்து கொடுத்து, யானையின் வாய் கிழிந்து இறந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பல வனவிலங்கு ஆர்வலர்கள் இது போன்றப் பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டும் என்றுக் கூறி வந்தனர். இந்நிலையில், தற்பொழுது மற்றொரு சம்பவம் இதே போல் அறங்கேறி உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம் பில்ஷாபூர் மாவட்டத்தில் உள்ளது ஜான்துட்டா என்றப் பகுதி. இந்தப் பகுதியில் வசித்து வந்த ஒருவர், தன்னுடைய மாட்டுக் கொட்டகையில் பசு மாட்டினைக் கட்டி வைத்து இருக்கின்றார். அந்த மாட்டிற்கு யாரோ, உணவில் வெடி வைத்துக் கலந்து கொடுத்துள்ளனர்.

இந்த வெடி வெடித்ததில் அந்த மாட்டின் தாடை கிழிந்துள்ளது. அந்த மாட்டால் அடுத்த வேளை உணவினை உண்ண இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தினை வீடியோவாக பதிவு செய்த அந்த மாட்டின் ஓனர், யாரோ என் மாட்டினை இவ்வாறு செய்து விட்டனர் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

HOT NEWS