டில்லியில் தீ விபத்து! 1500க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தது!

26 May 2020 அரசியல்
delhifire1.jpg

டில்லியில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், 1500க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது.

டில்லியில் உள்ள துக்ளகாபாத் என்றப் பகுதியில் உள்ள சேரியில், நள்ளிரவு 12.50 மணியளவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால், அந்தச் சேரிப் பகுதியில் இருந்து குடிசைகளில் தீப்பற்றியது. நள்ளிரவு நேரம் என்பதால், தூக்கத்தில் இருந்து பொதுமக்கள் விழிப்பதற்குள் தீயானது மளமளவென பரவியது.

இதனால், பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தத் தீயினை அணைக்க, தீயணைப்பு வீரர்களும் காவலர்களும் போராடினர். சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, 3.40 மணியளவில் தீயானது அணைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய போலீசார், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து வருவதால், விரைவில் இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தத் தகவல்கள் வெளியாகும் என்றுக் கூறியுள்ளனர்.

எப்படியும், 1000 முதல் 1500 குடிசைகள் தீவிபத்தால் எரிந்து சாம்பலாகி இருக்கும் என்றுக் கூறப்படுகின்றது. இந்த விபத்திற்கு எது காரணமாக இருந்தது என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், டெல்லியில் தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS