டெல்லியில் மாம்பழம் திருடிய பொதுமக்கள்! இவர்களை நினைத்தா மோடி பெருமைப்பட்டார்?

23 May 2020 அரசியல்
mangotheft.jpg

டெல்லியில் யாரும் இல்லாதக் கடையில், பொதுமக்கள் மாம்பழம் திருடிய காட்சி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதே மிக சவாலாக உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜகத்பூரி பகுதியில் சாலையில் வைத்து, ஒருவர் மாம்பழம் விற்பனை செய்ய வந்தார்.

அவர் தன்னுடையக் கடையை சாலையில் அமைத்து, பழங்களை விற்க ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், திடீரென்று அவர் வெளியில் வேறுக் காரணத்திற்காகச் செல்ல, அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், அந்தக் கடையில் இருந்த பழங்கை சூரையாடி விட்டனர். போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்தி அடித்துக் கொண்டு பழம் எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வட இந்தியர்களை நினைத்து, நாடேப் பெருமைக் கொள்கின்றது என, தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி பெருமையாகப் பேசினார். ஆனால், தற்பொழுது அவர்கள் இவ்வாறு செய்து வருவது அவர் பெயரைக் கெடுக்கும் விஷயமாகவே அமைந்துள்ளன.

HOT NEWS