டெல்லியில் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட, மூன்று மடங்கு கட்டணத்தினை உயர்த்தியுள்ளது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இன்று, அங்கு பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில், திடீரென்று ஒன்று சேர்ந்த மாணவர்கள், கல்லூரிக்கு வெளியே நின்று கோஷங்களை எழுப்பினர். கட்டணத்தை குறை, ஹாஸ்டல் கட்டணத்தையும் குறை. ஆடைக் கட்டுப்பாடுகளை குறை என கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து, அங்குப் பாதுகாப்பிற்காக, போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில், கட்டுக்கடங்காத அளவில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர். அவர்கள் சமாளிக்க போலீசார் வஜ்ரா வாகனத்தினை வைத்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும், கூட்டம் கலையாமல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.