அமைச்சர் துரைக்கண்ணு மரணம்! தலைவர்கள் இரங்கல்!

01 November 2020 அரசியல்
duraikannu.jpg

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக் குறைவால், சென்னையில் காலமானார். அவருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு 12 மணியளவில், காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த துரைக்கண்ணு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்றுக் கூறியிருந்தது. அதற்கு தற்பொழுது பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அஇஅதிமுகவிற்காக, தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் இருந்து, மூன்று முறை வெற்றி பெற்றவர் துரைக்கண்ணு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS