தன்னுடைய சம்பளத்தை விட்டுக் கொடுத்த ஹரி!

08 May 2020 அரசியல்
haristatement.jpg

இந்தியா முழுவதும் வருகின்ற மே-17ம் தேதி, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், சினிமா சூட்டிங் உட்பட, திரைப்படத் துறை சார்ந்த அனைத்து பணிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனால், சினிமா துறையானது கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, சினிமா துறையினர் தங்களுடைய சம்பளத்தினைக் குறைக்க முன் வந்துள்ளனர். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தன்னுடைய சம்பளத்தில் இருந்து, 25% குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளார்.

அதே போல், தற்பொழுது இயக்குநர் ஹரியும் தன்னுடைய சம்பளத்தினைக் குறைத்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான், நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும்.

இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப் போடும் அருவா திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் இருந்து, இருபத்தைந்து சதவிகிதத்தினை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றுக் கூறியுள்ளார். இதற்கு, பலரும் தங்களுடைய வரவேற்பினை தெரிவித்துள்ளனர். இவர் தற்பொழுது, சூர்யா நடிப்பில் அருவா படத்தினை உருவாக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS