துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட திமுக பிரமுகர் அதிரடி கைது!

13 July 2020 அரசியல்
gunfound.jpg

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மனை, சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

சென்னையினைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர் குமாருக்கும், திமுக எம்எல்ஏவாக இருக்கும் இதயவர்மனுக்கும் இடையில், கொடுக்கல் வாங்கலில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. நிலத்தகராறும் இருந்து வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இதயவர்மன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கள்ளத்துப்பாக்கியினைப் பயன்படுத்தி காரில் சென்று கொண்டிருந்த குமார் மற்றும் அவருடைய ஆட்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், ரியல்எஸ்டேட் அதிபர் குமாரின் உதவியாளர் இமயம் என்பவருக்கு, படுகாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகக் காவல்துறையினர், எம்எல்ஏ இதயவர்மனைத் தேட ஆரம்பித்தனர். இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் பதுங்கியிருந்த எம்எல்ஏ இதயவர்மனைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய ஐந்து பேரினைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, கள்ளத்துப்பாக்கிளும் கைப்பற்றப்பட்டது.

HOT NEWS