திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு கொரோனா! மருத்துவமனையில் சிகிச்சை!

04 June 2020 அரசியல்
janbazhagan.jpg

திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு கொரோனா சிகிச்சைக்காக, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்த நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் தற்பொழுது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகின்ற ஜெ.அன்பழகனுக்கு ஏற்கனவே கல்லீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த வைரஸ் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சையானது, 24 மணி நேரமும் வழங்கப்படுவதாக கூறப்பட்டு வருகின்றது.

HOT NEWS