போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணியிட மாற்றம்!

31 October 2019 அரசியல்
doctorsprotest.jpg

தொடர்ந்து ஏழாவது நாளாக, தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து ஏழாவது நாளாக நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு, தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவர்கள் இப்படி மழைக்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், அதனால், உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.

அதனைப் பொருட்படுத்தாமல், மருத்துவர்கள் தொடர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிரேக் இன் நோட்டீஸ் வெளியாகி உள்ளது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பலரும், தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, சென்னையைத் தொடர்ந்து கோவையிலும், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS