அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபருக்கான அவசரக் காலப் பதுங்குக் குழிக்குள் ஒரு மணி நேரம் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தொடங்கி, அமெரிக்கா முழுவதும் கருப்பர்கள் பல லட்சம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வளவுப் பிரச்சனைகள் இருக்கின்ற சமயத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவருக்காக உள்ள அதிஉயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சேப் பங்கர் எனப்படும் பதுங்குக் குழியினைப் பார்வையிட்டு உள்ளார்.
அதில், சுமார் ஒரு மணி நேரம் செலவழித்துள்ள அவர், அதன் வசதிகளை முற்றிலும் ஆய்வு செய்துள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை இரவு இந்த சோதனையில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திடீரென்று அவர் பதுங்குக் குழியினைப் பார்வையிட்டால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.