கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கும், நுழைவுத் தேர்வு நடத்த, பூஜிசி பரிந்துரை செய்துள்ளது. அதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தினை பதிவு செய்துள்ளனர். பாமக தலைவர் டாக்டர்.ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், பல்கலைக் கழக மானியக்குழு, இந்த பரிந்துரையை ஏற்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, எப்பொழுது கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கலாம் என, பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டது ஆர்சி குஹாத் தலைமையிலானக் குழு. இந்தக் குழுவின் பரிந்துரைக்கு, தற்பொழுது கண்டனம் வலுத்து வருகின்றது.
தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை - அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது!
— Dr S RAMADOSS (@drramadoss) April 29, 2020
@ugc_india #SayNoToCommonEntranceTest