மாட்டின் சிறுநீரைக் குடித்தால், கொரோனா வைரஸ் நோய் சரியாகும்! இந்து மகா சபா தலைவர் பேச்சு!

02 February 2020 அரசியல்
hindumahasabha.jpg

மாட்டின் சிறுநீரினைக் குடித்தால், கொரானா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் நோயானது சரியாகும் என, இந்து மகா சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ் பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால், தற்பொழுது உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இந்திய அரசு. இது பற்றி, கருத்துத் தெரிவித்துள்ள இந்து மகா சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ் பேசுகையில், மாட்டின் சிறுநீரும், மாட்டின் சாணமுமே கொரோனா வைரஸிற்கான நோய்க்கு மருந்தாகும்.

சிறப்பு யாகத்தின் மூலமும் இந்த நோயினை, இந்த புவியில் இருந்து விரட்ட இயலும். இந்த மாட்டின் சிறுநீரினையும், மாட்டின் சாணத்தினையும் உண்டால் கொரோனா வைரஸ் பரவாது என, அவர் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது, வைரலாகி வருகின்றது.

HOT NEWS