காஷ்மீரில் கிடந்த கள்ள நோட்டு பை! போலீஸ் கைப் பற்றியது!

20 October 2019 அரசியல்
2000.jpg

காஷ்மீரில் கிடந்த 4,64,000 ரூபாய் மதிப்புள்ள, கள்ள நோட்டுக்களை போலீசார் கைப்பற்றியது.

சிஐஎஸ்எப் எனும் பாதுகாப்புப் படை, டெல்லியில் உள்ள மெட்ரோ ஸ்டேசன் பகுதியில் (காஷ்மீர் தொடங்கும் பகுதியில்) ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது, மர்மமாக கிடந்த பையினைக் கைப்பற்றினர். அதில், வெடிகுண்டு இருக்க வாய்ப்பிருக்கும் எனும் அச்சம் நிலவியது. இந்நிலையில், வெடி குண்டு இல்லை என்தை உறுதி செய்த பின், அப்பையினைத் திறந்து பார்த்தனர். அதில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்பையினை மீட்டு ஆராய்கையில், சுமார் 4,64,000 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். பின்னர், அந்தப் பையினை டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

HOT NEWS