சட்டசபைல காபி கேட்டா சுடு தண்ணீ தராங்க! வாய்ல வைக்க முடியல என, துரைமுருகன் பேசும் பொழுது தமிழக சட்டசபையே சிரிப்பலையில் அதிர்ந்தது.
துரைமுருகன் பேச்சினை கேட்காதவர்கள் என யாரும் இருக்க இயலாது. அந்த அளவிற்கு, மனிதர் மிக ரசனையாகப் பேசுபவர். அவர் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் பொழுது பேசினார்.
அதிமுக எம்எல்ஏ செம்மலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினை பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தார். அவர் பேசி முடித்தப் பின் எழுந்த திமுக பொருளார் துரைமுருகன், செம்மலையை எனக்கு கடந்த 50 ஆண்டுகளாக தெரியும். முதலமைச்சார் தான், அவரை இவ்வாறு பேச வைத்து இருக்கின்றார். இப்படி பேச வைத்த முதலமைச்சரைத் தான் நான் பாராட்ட வேண்டும் எனக் கூறினார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துரைமுருகன் தங்களுக்குள் சிண்டு முடியும் வேலையைப் பார்க்கின்றார் எனக் கூறினார். அதில் நாங்கள் சிக்க மாட்டோம் எனவும் கூறினார்.
பின்னர் பேச ஆரம்பித்தார் துரை. அவர் பேசுகையில், சட்டப்பேரவையில் ஒரு நல்ல காபி கூடி கிடைப்பதில்லை. காபி கேட்ட சுடுதண்ணீ தான் கிடைக்குது என வருத்தப்பட்டார். அதற்குப் பதில் அளித்த பேரவைத் தலைவர், அடுத்து காபியுடன் ஸ்நாக்ஸூம் தருவதாக தெரிவித்தார். இதற்கு, தமிழக சட்டப்பேரவையே சிரிக்க ஆரம்பித்துவிட்டது.