பாகிஸ்தான்-இந்தியா பகுதியில் நிலநடுக்கம்! 25க்கும் மேற்ப்பட்டோர் பலி!

25 September 2019 அரசியல்
kashmirearthquake.jpg

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில், ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, தற்பொழுது வரை 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் பகுதிக்கு எப்பொழுது தான், விடிவு காலம் பிறக்குமோ தெரியல. தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனைகளை, அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். தற்பொழுது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருக்கும் மிர்பூர் பகுதியில், நேற்று மாலை 5.8 அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், சரியாக மாலை 4.32 மணிக்கு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், சுமார் 400 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். தற்பொழுது வரை இந்த நிலநடுக்கத்தால், 26 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகளில் விரிசல், கட்டிடங்களில் விரிசல், பிளவுகள் எனப் பல இடங்கள் இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், டில்லி, சண்டிகர் உட்பட பல பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

HOT NEWS